குளவி கொட்டி விட்டதா? உடனே இத பண்ணுங்க வீக்கம், அரிப்பு போன்ற தொல்லையே இருக்காது!

மழைக்காலத்தில் தான் நிறைய பூச்சிகள் தொல்லை இருக்கும்.
பல்லி, குளவி, தேனீ போன்ற விஷப்பூச்சிக்கடிகள் மற்றும் இன்ன பூச்சி கடித்தது என்று தெரியாமல் பதட்டம் தரும். எந்த பூச்சிக்கடி என்றாலும் முதலுதவி செய்து கொண்டு மருத்துவரை அணுக வேண்டும்.

பல்லி :
பல்லி பெரும்பாலும் கடிக்காது, சில நேரங்களில் பல்லி கடித்து விட்டால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால், பல்லி கடித்த விஷம் குறையும்.
தேனீ :
தேனீ கொட்டினால் கடிவாயில் சுண்ணாம்பு அல்லது வெங்காயத்தை தேய்த்து விடவும். அதன் கொடுக்கும் இருந்தால் அதனை பிய்த்து எடுக்கவும்.நிறைய தேனீக்கள் கொட்டினால் மருத்துவரை அணுகுவது நல்லது.
பூச்சிக்கடி :
சில நேரத்தில் பெயர் தெரியாத எந்த பூச்சிகள் கடித்து விட்டாலும், வெதுவெதுப்பான நீரில், மக்காச்சோளமாவு, சமையல் சோடா ஆகிய இரண்டையும் சேர்த்துக் கலந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால், விஷம் இறங்கும்.
அரணை :
அரணை கடித்தாலோ அல்லது நக்கினாலோ சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து, அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து பதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும்.
தேள் :
தேள் கடித்து விட்டால், 20 மிளகு மற்றும் சிறிதளவு தேங்காய் இரண்டையும் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இதனால் தேள்கடி விஷம் குறையும்.
வெள்ளைப் பூண்டை அரைத்து கடிவாயில் தடவலாம் அல்லது புளியைக் கரைத்து சிறிது குடித்துவிட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவலாம்
கம்பளிப்பூச்சி:
கம்பளிப்பூச்சியின் ரோமம் உடலில் பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவினால் வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை அரைத்து பற்று போடலாம். அல்லது வெற்றிலை சாறு எடுத்து அழுத்தி தேய்க்கலாம். சிறியாநங்கை இலைகளை மென்று தின்றால் உடனே அரிப்பு நீங்கும்.
பூரான் :
பூரான் கடித்து விட்டால், வெற்றிலைச் சாற்றில் மிளகை நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதை காயவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
துளசி பொடி செய்து, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டாலும் பூரான் கடி விஷம் குறையும்.
விஷக்கடியின் வலி குறைய என்ன செய்ய வேண்டும்?
கரிசலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து சாப்பிட்டால், விஷக்கடியால் ஏற்படும் வலி குறையும்.
விஷப்பூச்சிகள் எது கடித்தாலும், உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பைத் தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும்.
நாய், பூனை, பாம்பு கடித்து விட்டால் என்ன செய்வது?
நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் கடித்தால், உடனடியாக வெங்காயம், உப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால், விஷம் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *